டெல்லியில் மிரட்டும் கனமழை

மிரட்டும் கனமழையால் டெல்லியில் உள்ள தாழ்வான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கயிதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்துள்ளனர்.

தொடர் மழை பெய்து வருவதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று இரவு முதல் 13 செ,மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 73.2 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. ஆசாத் மார்க்கெட் பகுதியில் கனமழை பெய்து 1.5 அடி அளவுக்கு நீர் தேங்கி காணப்படுகிறது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மிதந்தபடி செல்லும் காட்சிகள் காணமுடிகிறது. நீர் தேங்கிய சூழலில் மின்டோ பிரிட்ஸ் பகுதியில் உள்ள சாலை மூடப்பட்டுள்ளது என்று டெல்லி போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.

Exit mobile version