பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோன தொற்று பரவுதலை குறைப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் சென்ற மார்ச் மாதம் மூடப்பட்டது. அதன் பின்னர் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஐம்பது சதவீத ஊழியர்களுடன் வேலை நிறுவனங்கள் தொடங்கியது. தற்போது பேருந்து முதல் ரயில்கள் முதற்கொண்டு இயங்கி வருகின்றது. மக்களும் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறந்தாள் கொரோன பரவல் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்கும்படி அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்ற திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் அணைத்து பள்ளிகளிலும் பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்கப்பட்டது.
அதுகுறித்து கல்வித்துறை கூறியிருப்பது யாதெனில், பள்ளிகளை திறப்பதற்கு பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளனர். பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கும் என் கூறியுள்ளது.