மன்னார்குடியை சேர்ந்த அட்சயா எனும் மாணவிக்கு பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது.
தற்போது நடந்து வரும் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வில் இம்முறை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7 . 5 சதவீதம் இடம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இப்போது நேரு விளையாட்டு அரங்கத்தில் மெடிக்கல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன் முதல்கட்டமாக இன்று பல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஆரம்பித்து நடந்துவருகிறது.
இந்நிலையில் மன்னார்குடியை சேர்ந்த மாணவி அட்சயாவிற்கு மருத்துவ கலந்தாய்வில் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் தான் இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அட்சயா ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி விட்டது என்றும் மாணவர்களின் படிப்பு செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்தது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தன் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்ததை நினைத்து அட்சயாவின் தந்தை மிகவும் ஆனந்தமாக உள்ளார். தன் குடும்பத்தின் முதல் பட்டதாரியான தன மகள் பல் மருத்துவர் ஆகா போவதை எண்ணி தான் மிகவும் மிகிழவதாக கூறியுள்ளார். மேலும் தங்களின் இந்த கனவு அரசு பள்ளி மாணவர்களுக்கான இந்த ஒதுக்கீட்டினால் நிறைவேறியுள்ளதால் முதலமைச்சர் எடப்பாடி ஐயா அவர்களுக்கு தன நன்றியை தெரிவித்து கொள்ளவதாகவும் கூறியுள்ளார்.