பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் என்பது எல்லா சீசன்களிலும் வைக்கப்படும் குற்றச்சாட்டு தான்.
இந்த குரூப்பிஸம் அவர்களாகவே உருவாக்குகிறார்களா? இல்லை தானாக அமைகிறதா என தெரியவில்லை. ஆனால் இம்முறை இந்த பாணி ஆரியால் மிகவும் அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து சொல்லப்பட்டு கொண்டுஇருக்கிறது.
முதலில் நடுநிலையாக இருந்த சம்யுக்தா கடந்த சில நாட்களாக ஒரு சாராருக்கு ஆதரவு தருவது போல் அப்பட்டமாக தெரிகிறது.
இது நட்பாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால் இந்த குரூப்பிஸம் யார் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் அளவிற்கு போகும் போது தான் மிக பெரிய தவறாக தெரிகிறது.
கடந்த வாரம் சுவாரசியம் அற்ற போட்டியாளர் என அதிக பேர் ஓட்டு போட்டது ஆரிக்கு தான், ஆனால் இதில் ஆரி ஷிவானியை விட சுவாரசியம் இல்லாத போட்டியாளர் என்ற கேள்வி எடுக்கப்பட்டால் நமக்கே உண்மை தெரியும்.
மேலும் இந்த குரூப்பிஸத்தால் யாரும் தங்கள் நண்பர்களை நாமினேட் செய்யப்போவதில்லை இதனால் தகுதியான போட்டியாளர் ஒருவர் வெளியில் செல்லலாம் தகுதியற்ற போட்டியாளர் உள்ளே இருக்கலாம் இங்கு யார் உள்ளே இருக்க வேண்டும் யார் வெளியே போக வேண்டும் என்பதை கூட இந்த குரூப்பிஸம் தான் முடிவு செய்கிறது.
மேலும் இந்த குரூப்பிஸத்தால் ஒரு சிலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள், கார்னர் செய்யப்பட்டு மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
இதனை ஆரி கடந்த சில வாரங்களாகவே அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார். இதனால் தான் ஆரிக்கும் சம்யுக்தாவுக்கும் இடையே பிரச்சனையே ஆரம்பித்தது.
இதனையே இவர்கள் தற்போது நீதிமன்ற விவாதத்திலும் எடுத்திருக்க்கிறார்கள். ஆரி சம்யுக்தா பாலாவுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறார்.
நேற்று முந்தைய நாளில் பாலா மற்றும் சனம் பிரச்சனையின் போது ஆரி பேசியதற்கு குறுக்கே தலையிடாதீர்கள் என்று சொன்ன பாலா இன்று ஆரி மற்றும் சம்யுக்தா பேசி கொண்டிருக்கும் போது குறுக்கே பேசுகிறார்.
ஆரி எந்த அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஒதுக்கப்படுகிறாரோ அந்த அளவுக்கு வெளியில் அவருக்கு வெளியில் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது.
குரூப்பிஸம் இல்லை என்று இவர்கள் எத்தனை முறை அடித்து சொன்னாலும் போட்டியாளர்களின் நடவடிக்கை வெளிப்படையாகவே இதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.