இந்த முறை லண்டனில் துப்பறியும் விஷால்!!

விஷால் இயக்குனராக அறிமுகமாகும் துப்பறிவாளன் -2 படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் 2017இல் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் துப்பறிவாளன். அந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அப்படத்தின் 2ஆம் பாகத்தினை உருவாக்க திட்டமிடப்பட்டது.

கொரானாவுக்கு முன்னர் துப்பறிவாளன்-2ஆம் பாகம் அறிவிக்கப்பட்டது. அப்போது படம் அறிவிக்கப்பட்டபோது மிஷ்கின் தான் இயக்குனர். விஷால் தயாரிப்பாளராக இருந்தார். அதன் பின்னர், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அதன் பின்னர் விஷாலே இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் இப்பட வேலைகள் நடைபெறாமலே இருந்தது. அதனால், படம் டிராப் ஆகிவிடும் சூழ்நிலை இருந்தது.

ஆனால், அதனை பொய்யாக்கும் விதமாக தற்போது புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் லண்டனில் ஆரம்பிக்க உள்ளதாம். இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தின் அடுத்தடுத்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version