கர்ணன் படத்தின் ‘பண்டாரத்தி புராணம்’ இரண்டாவது பாடல் நாளை வெளியீடு

கர்ணன் படத்தின் ‘பண்டாரத்தி புராணம்’ இரண்டாவது பாடல் நாளை வெளியிடப்பட்டுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் ’பண்டாரத்தி புராணம்’ நாளை மாலை வெளீயிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது

‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.

நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாளின் குரலில் வெளியான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நாளை மாலை 5;03 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Exit mobile version