கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் தாமிரா மரணம்… திரையுலகினர் அதிர்ச்சி…

கொரோனா பாதிப்பு காரணமாக இயக்குனர் தாமிரா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 15,684 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றின் காரணமாக 94 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், 53 வயதாகும் தாமிரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more – இந்தியாவின் வேண்டுகோளை ஏற்ற பூடான்.. அசாம் எல்லையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை திறக்க சம்மதம்..

தாமிரா என்ற காதர் முகைதீன் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்பதும், மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவரின் இயக்கத்தில் ‘ரெட்டைச் சுழி’, ‘ஆண் தேவதை’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

Exit mobile version