சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சனா கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாட ஆசை.
நடிகை சஞ்சனா தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாட வேண்டுமென சிறை அதிகாரிகளிடன் அனுமதி கோரியதாக தகவல்கள் வெளியாகிறது.
கன்னட சினிமாயுலகின் பிரபல நடிகை சஞ்சனா கல்யாணி(30 ). இவர் போதைப் பொருளைப் பயன்படுதியதாகவும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் மத்திய குற்றப்பிரிவு போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது சசிகலா உள்ள அக்ரஹார சிறையில் சஞ்சனா அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி அவரது பிறந்தநாள் என்பதால் தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடவேண்டுமென சிறைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் மூலமாகக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.