‘ராதே ஷ்யாம்’ ரிலீஸ் தள்ளி வைப்பு…

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபாஸ், கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். . ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. படத்தில் டைம் ட்ராவல் கதைக்களமும் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் தென்னிந்திய வெர்ஷனுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ராதே ஷ்யாம் திரைப்படம் ஜனவரி மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகமாகி வருவதால் படத்தின் ரிலீசைத் தள்ளி வைப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“கடந்த சில நாட்களாக எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து வருகிறோம், ஆனால் ஓமிக்ரான் பரவல் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு பார்த்தால், நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் எங்கள் படத்தை நாங்கள் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளோம்.  ராதேஷ்யாம் காதல் VS விதியைப் பற்றிய கதையாகும், உங்கள் அன்பு இந்த கடினமான காலங்களில் நாங்கள் ஒன்றாக எழுவதற்கு உதவும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.  விரைவில் திரையில் சந்திப்போம்!!!” என்று. தெரிவித்துள்ளனர். 

Exit mobile version