மகனுக்காக மூன்றாவது முறை திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்…

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுக்காக மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுகு, ஹிந்தி , கன்னடம், மலையாளம் என அணைத்து மொழி திரைப்படங்களிலும் மிகவும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். வில்லன் ரோல் என்றாலும், தந்தை ரோல் என்றாலும், குணச்சித்திர வேண்டாம் என்றாலும் ஒரு கை பார்ப்பவர் அவர்.

அவர் 1994 ஆம் ஆண்டு லலிதாகுமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுள் மனம் ஒற்றுப்போகாமல் திருமண வாழ்க்கை கசக்கவே 2004 ல் அவரை விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தன் திருமண வாழ்க்கையின் தோல்வியை அடுத்து அவர் மீண்டும் தன் சினிமா வாழக்கையில் கவனம் செலுத்தி பல வெற்றி படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், ஹிந்தி நடன இயக்குனர் ஒருவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவர் தற்போது தன்னது ட்விட்டர் பக்கத்தில் தன் மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து என் மகன் விருப்பப்பட்டதால் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொள்கிறேன் என எழுதி இருந்தார்.

இதற்கு பல நெட்டிசன்கள் தேவையற்ற கமெண்ட்களை பதிவேற்றி வருகின்றனர். ஆயினும் தன் மகனுக்காக மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டுள்ளாரே, இவர் உண்மையிலும் அபியும் நானும் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் தான் போலும்.

Exit mobile version