சாதி பாகுபாடு கிராமங்களில் அதிகமாக உள்ளது என நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகரும் சமூகர் ஆர்வலருமான நடிகர் நவாசுதீன் சித்திக் சாதி வெறி பற்றியும் அதனால் தான் சந்தித்த இடர்களைப் பற்றியும் பிரபல மீடியாவிற்குத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நவாசுதீன் சித்திக் தன் திறமையின் மூலம் இன்று சர்வதேச ஊடங்களின் கவனத்தைப் பெற்றதுடன் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். இவர் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இவர் சாதி வெறி பற்றிக் குறிப்பிடும்போது, தனது குடும்பத்தைச் சாதியப் பாகுபாடு காரணமாக ஒதுக்கி வைத்ததாகவும், இந்தியாவில் இன்னும் சாதிய ஆதிக்கம் நீடித்து இருப்பதாகவும் கிராமங்களில் இன்னும் அதிகமாகவே உள்ளதாக தன் வேதனையைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் நடிகனாக இருந்தாலும் அவர்களுக்கு பிரபலம் என்பது முக்கியமல்ல சாதி தான் முக்கியம் அது அவர்களின் நாடி நரம்புகளில் ஊறியுள்ள்ளது என்றும் சமீபத்தில் ஹத்ராசில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.