சஞ்சய் தத், ஆலிய பட் நடிப்பில் வெளியான சதக் 2 திரைப்படம், பாலிவுட் திரையுலகம் இதுவரை காணாத அளவிற்கு மிக மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு அங்குள்ள வாரிசுகளின் ஆதிக்கமே காரணம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆலியா பட் உள்ளிட்ட வாரிசு நடிகர்கள் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகேஷ்பட் இயக்கத்தில் அவரது மகள்கள் பூஜாபட், ஆலியா பட் மற்றும் சஞ்சய் தத், ஆதித்யராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படமான, ‘சதக் 2’ இரு தினங்களுக்கு முன்பாக ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியான சிறிது நேரத்திலேயே படத்தைப் பார்த்தவர்கள் உடனடியாக ஐஎம்டிபி இணையதளத்தில் படத்திற்கான ரேட்டிங்கில் மிக மோசமான விமர்சனங்களை அள்ளி தெளித்துள்ளனர். 2 மணி நேரம் வீணானது, காசு கரியானது, படத்தை எடுக்காமலே இருந்து இருக்கலாம் என மோசமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருக்கினறனர்.
‘நெப்போட்டிசம்’ விவகாரத்தில் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் மகேஷ்பட் குடும்பத்தினர் படம் என்பதால் ரசிகர்கள் அந்த அளவிற்கு விமர்சிக்கிறார்கள் என ஆரம்பகட்டத்தில் கூறபட்டது. ஆனால், படம் பார்த்த நடுநிலையான விமர்கர்கள் கூட இது ஒரு ‘குப்பைப்படம்’ என்றே விமர்சனம் செய்துள்ளனர். படத்தைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றெல்லாம் எழுதி படத்தை கிழி கிழி என விளாசியுள்ளனர்.
இதுவரை இந்த படத்திற்கு விமர்சகர்கள் உட்பட, சுமார் 86 ஆயிரம் பேர் கொடுத்துள்ள ரேட்டிங்கில் மொத்த மதிப்புமே ஒரு ஸ்டாருக்கு மேல் தாண்டவில்லை.
ஏற்கெனவே, இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள் வாங்கிய ட்ரெய்லர் வீடியோ என்ற உலக சாதனையைப் படைத்தது. தற்போது மோசமான ரேட்டிங்கிலும் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.