ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் ஊஹான் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனவைரஸ் இன்று உலக நாடுகள் எங்கும் பரவி மனித பேரழிவுகளையும் பொருளாதர நெருக்கடிகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தன. கொரோனா என்னும் கொடிய வைரஸ் சமூக பரவலாக மாறிவிட கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.
இந்தியாவில் கொரோனவைரஸ் முதன் முதலாக ஜனவரி மாதத்தில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு சிறு புள்ளியாக ஆரம்பித்த இந்த வைரஸ் இன்று சற்றே திரும்பி பார்க்க முடியாத வகையில் நாடெங்கும் பரவி வருகிறது. உச்ச கட்டமாக ஒரே நாளில் இந்தியாவில் 78, 761 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு முன்னதாக இதே போன்று அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் 17 ம் தேதி ஒரே நாளில் 77,368 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
பல உலக நாடுகளை போலவே இந்தியாவும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் ஊரடங்கு அமல் சட்டத்தை கையில் எடுத்தது. இதன் முதற்கட்டமாக கடந்த மார்ச் 22 ம் தேதி 14 மணி நேர ஊரடங்கு பிரதமர் மூலமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது, பின்பு அது 21 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 14 ம் தேதி முதல் மே 3 ம் தேதி வரை ஊரடங்கிற்க்கான அமல் சட்டம் கொண்டு வரப்பட்டது. மே மாதம் முழுவதும் நீடிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் முதல் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பல தளர்வுகளுடனான ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதைதொடர்ந்து தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அடங்கிய புதிய அறிவிப்பு வெளிப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார் .