“நான் மாமி இல்ல நீதான் மாமா”… யாரிடம் இப்படி சண்டைக்கு போனார் சின்மயி?

தென்னிந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகிகளுல் ஒருவர் சின்மயி. சின்மயின் குரலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாடகி சின்மயி, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தது, சினிமா வட்டாரத்தினர் மற்றும் அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அப்போதைய செய்தி களங்கள் பரபரப்பான செய்திகளை எழுதி தள்ளின.

இதன் காரணமாக பின்னர் சின்மயின் வாய்ப்புகள் மெல்ல மெல்ல தட்டி பறிக்கப்பட்டன. மேலும் இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்த நிலையில், சின்மயி வைரமுத்துவின் மீது குற்றச்சாட்டை வைத்ததால், அவர் டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியை இழந்தார்.

தற்போது இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து வைரமுத்து நீக்கப்பட்டதை, சமூகவலைதளங்களில் சின்மயி தனக்கு நியாயம் கிடைத்துவிட்டதாக பெரும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நெட்டிசன்கள் சின்மயியை கேலி செய்யும் மீம்ஸ் ஒன்றை உருவாக்கி அதில் சின்மயியை மாமி என குறிப்பிட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சின்மயி, ‘ஜாதியை ஒழிக்கும் அவங்களே, ஜாதி வெறி புடிச்ச மாமாஸ்.
இவங்க குரூப்ல ஒருத்தரை குறைசொல்லி விட்டால் போதும்,
இவர்களது கைக்கூலி அவர்களது இஷ்டத்திற்கு எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுவார்கள்’ என்றும் மற்றொரு பதிவில், ‘நான் பதிவிடும் கருத்து பிடிக்கலை என்றால் விமர்சனம் செய்.

ஒருத்தரை மதிக்கிற தன்மை எனக்கு இருக்குது. என்னை மாமி, அது இதுன்னு சொன்னா உனக்கெல்லாம் மரியாதையை கிடையாது’ என்று சின்மயி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதிரே மோதும் நெட்டிசன்கள் உடன் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்.

Exit mobile version