பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் 18 பேரில் ஒருவரான அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி, தனது முன்னாள் கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதாக அளித்த பேட்டியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தங்களுடைய சொந்தக் கதை சோகக் கதையை டாஸ்க் என்ற பெயரில் கூறி வருகிறார்கள். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா தன்னுடைய வாழ்க்கை கதையை கூறியபோது தன்னுடைய திருமணம் குறித்தும் கூறியிருந்தார்.
மேலும் தான் திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு தவறான ஆளாக இல்லாமல் இருந்திருப்பேன் என்றும், என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என்றும் அவர் கதை சொல்லியிருந்தார். ஆனால் தனது திருமண விவாகரத்திற்கான காரணத்தை அவர் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
இந்த நிலையில் அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில், ‘தனது முன்னாள் கணவர் அபிஷேக் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருமுறை கணவர் நம்மை அடிப்பதற்கு நாம் அனுமதித்து விட்டால் அதன் பிறகு அவர் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் எனவே முதல்முறையாக அடிக்கும்போதே, அடிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
மனைவியை கைநீட்டி அடித்து விட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்டாலும் அந்த நபர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர் அடிக்கத்தான் செய்வார் என்றும் எனவே அடிக்கும் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதே சரியான வழி என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மனைவியை அடித்து கொடுமை படுத்தியதால் தான் தனக்கு விவாகரத்து நடந்தது என்ற உண்மையை மறைத்த அபிஷேக்கை நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.