‘விடுதலை’ படத்தில் இணைந்த இயக்குனர் கவுதம் மேனன்…!!

‘விடுதலை’ படத்தில் இணைந்த இயக்குனர் கவுதம் மேனன் இன்னும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

அசுரன் பட வெற்றியை அடுத்து ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தின் ஒரு கதையை இயக்கிய வெற்றிமாறன் அடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது.

போலீஸாக நடிக்கும் சூரி, கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டல் போஸ்டரும் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கெளதம் மேனன் இணைந்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Read more : சேலையில் இடுப்பைக் காட்டி போஸ் கொடுத்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா புகைப்படங்கள்…!!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் பிரதாப் சகரவர்த்தி என்ற காவல்துறை அதிகாரியாக நடிப்பில் மிரட்டியிருந்த கவுதம் மேனனை வெற்றிமாறன் படைப்பில் பார்க்க அனைவரிடமும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version