இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதை தவிர்க்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாதென்று பல்வேறு தரப்பட்ட மக்களிடம் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் வந்த சில மணி நேரங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராக #ShameonVijaySethupathi என்னும் ஹாஷ்டாக் நெட்டிசன்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டது.
தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் இந்த திரைப்படத்திற்கு எதிராக தனது கண்டனக்குரலை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறிருப்பதாவது,
எங்களை பொறுத்தவரை முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி நம் ஈழத்தமிழர்கள் கொடுமை அனுபவித்த போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் எதிராக பிடில் வாசித்து கொண்டிருந்தவர். விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?
மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.
அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.