கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலமாக உதவி செய்ய வேண்டுகோள் வைத்துள்ளார்.
வாட்ச்மேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இந்தப் படத்தைத் தொடர்ந்து கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு பள்ளி பருவ காதலியாக நடித்திருந்தார். தற்போது தேள் மற்றும் கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இருவரையும் வீட்டில் வைத்து தான் கவனித்து வருகிறேன். அவர்களுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: தனது தந்தைக்கு ரெம்டிவ்சிவிர் மருந்து தேவை என்றும், அந்த மருந்து கிடைக்க உதவி செய்யுமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்.