ஆரம்பத்தில் குறும்படங்கள் மூலம் பிரபலம் ஆகியவர் நடிகர் கருணாகரன் குறும்படத்தின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி ஆகியோரின் நட்பு கிடைக்கவே திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.
முதல் படம் “பீட்சா”அவருக்கு சிறிய வேடம் என்றாலும் சூதுகவ்வும் படம் அவரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது தொடர்ந்து ஜிகர்தண்டா, லிங்கா, இன்று நேற்று நாளை” உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் கருணாகரன். காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் அசத்தி வரும் இவர் தற்போது ‘மாநாடு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காலில் ஏற்பட்ட அடி காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஏற்கனவே பீட்சா, சூதுகவ்வும் படங்களில் நடித்த போதே காலில் சிறிய அடிப்பட்டது. அப்போது பெரிதாக தெரியவில்லை. ஊரடங்குக்கு முன்பாக நடந்த மாநாடு படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் காலில் அடிப்பட்டது. அப்போது இருந்தே வலி அதிகமாக இருந்தது.ஸ்கேன் செய்து பார்த்ததில் ACL என்று சொல்லப்படும் மூட்டு கிழிந்து இருந்தது. இதற்காக ஆபரேஷன் செய்துள்ளேன். இன்னும் இரண்டு வாரங்களில் நலமாகி வீடு திரும்பிவேன் யாரும் பயப்பட வேண்டாம் என கூறினார்.