துல்கர் சல்மான், மாணவர்களுடனான தனது சமீபத்திய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி வீட்டிற்குள்ளேயே தங்கி, அதை கடைப்பிடிக்க முயற்சிப்பதன் மூலம் தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்திருப்பதை வெளிப்படுத்தினார்.
மம்மூட்டி தன்னை தானே சவால் செய்ய விரும்புவதாகவும், வீட்டை விட்டு வெளியேறாமல் எத்தனை நாட்கள் உள்ளே இருக்க முடியும் என்றும் பார்க்க வேண்டும் என்றுவீட்டில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
150 நாட்களில் தனது கேரள வீட்டிற்கு வெளியே கால் வைக்கவில்லை என்று துல்கர் தெரிவித்தார்.
மேலும், மம்மூட்டி ஒரு தனிப்பட்ட சாதனையை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், அவர் தன்னால் எவ்வளவு நாள் அப்படி இருந்துவிட முடியும் என்பதைக் காண ஆர்வமாக உள்ளதாகவும் துல்கர் மேலும் கூறினார். ஒரு சிறிய டிரைவிற்காக தனது அப்பாவை செல்லுமாறு வற்புறுத்தியதாகவும் துல்கர் கூறினார். ஆனால், மம்முட்டி ஆர்வம் காட்டவில்லை.
அதற்கு பதிலாக, மம்மூட்டி வெளியேறாமல் எவ்வளவு நேரம் வீட்டுக்குள் இருக்க முடியும் என்பதைப் பார்க்க விரும்புகிறேன் என்று கூறினார்.
உரையாடலின் போது, துல்கர் சல்மான் தனக்குவீட்டிற்குள் தங்கியிருப்பதில் சலிப்பாக இருப்பதாகவும், எப்போதும் தனது வீட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.