காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகைசமந்தாபற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை, கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் காதலில் இருந்தார் என்றெல்லாம் டோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
இதனால் நடிகைசமந்தாமன அழுத்தத்தில் இருக்கிறாராம். இதனைத் தொடர்ந்து தன் மீது விமர்சனங்களை எழுப்பிய யூடியூப் சேனல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், மன அழுத்தத்தை போக்க, நடிகைசமந்தாதனது தோழியுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
அங்கிருந்து திரும்பிய பின் அவர் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளசமந்தா, தற்போது மேலும் 2 புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.