ஓணம் பண்டிகையான நேற்று ஒரே நாளில் 1000 பைக்குகள் கேரளா மாநிலத்தில் விற்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களிடையே பைக்கிற்கான மவுசு என்றுமே குறையாது. தனக்கென சொந்தமாக ஒரு பைக் வாங்க வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கெத்தான ஒரு கனவு. இரண்டரை மணி நேரம் ஒரு பைக்கை வைத்தே திரைக்கதையை நகர்த்தி ஒரு படம் வெற்றி பெற்றதே நம் இளைஞர்கள் பைக்கின் மீது கொண்ட காதலுக்கு சான்று.
சந்தையில் புதிதாக வரும் பைக்குகளை வாங்கி வலம் வரவேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். அதிலும் தற்போது ராயல் என்பீல்ட் பைக்குககளே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Royal Enfield பைக்குககளை வாங்கவே இளைஞர்கள் இடையே பெரும் போட்டியே நிலவுகிறது. இந்த பைக்குககளை வாங்கும் இளைஞர்கள் நிஜ வாழ்வின் நாயகர்களாகவே உலா வருகின்றனர். தங்களின் பெரும் கனவாகவும், பெருமிதமாகவும் மாறி போன Royal Enfield உடன் நம் இளைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களே சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் இப்போது RE ல் சுற்ற தொடங்கி விட்டனர்.
ஆனால் ஊரடங்கு காலத்தில் Royal Enfield ன் விற்பனை 23 சதவீதம் குறைந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், ஓணம் பண்டிகையான நேற்று ஒரே நாளில் கேரள மாநிலத்தில் 1000 பைக்குககள் விற்கப்பட்டதாக அந்த நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதில் Interceptor 650, Continental GT, Bullet 350 உள்ளிட்டவை அடங்கும். பல மாதங்களாக நீடித்த சரிவை இது முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.