பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதில் இருந்து தாறுமாறாக அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் 2வது வாரத்தில் இருந்து விலை குறைந்து காணப்பட்டது.
தமிழக பட்ஜெட் தொடரின் போது அறிவிக்கப்பட்டு பெட்ரோலுக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதியில் இருந்து பெட்ரோல் விலையும், கடந்த மாதம் 24ம் தேதி முதல் டீசல் விலையும் மீண்டும் உயரத் தொடங்கியது.
அன்று முதல் தினமும் தொடர்ச்சியாக விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. பெட்ரோலை பொறுத்தவரையில் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 34 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய் 93 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.