பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டொயோட்டா நிறுவனத்தின், அர்பன் குரூயிசர் மாடல் ஆறு வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் விட்டாரா ப்ரெஸாவை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்துள்ள அர்பன் க்ரூஸர் சப்-காம்பாக்ட் எஸ்யூவிக்கு மாடல் காருக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. இந்த புதிய எஸ்யூவி ரக காரின் விலை செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று டீலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ப்ரெஸாவின் வரம்பில் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், ஒப்பிடுகையில் விலை சற்று உயர்ந்ததாக இருக்கும் என கூறபடுகிறது.
தோராயமாக புதிய ரக காரின் விலை ரூ .8.20 லட்சம் முதல் ரூ .1.11 கோடி (எக்ஸ்ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்பன் குரூயிசர் மாடல் கார் ஆறு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் வேரியண்ட்கள் பிரீமியம், ஹை, மிட், ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரிம்களிலும், ஆறு சிங்கிள் டோன் மற்றும் மூன்று டூயல் டோன் ஷேட்களில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
காரின் டாப் எண்ட் பிரீமியம் மாடலில் கிளைமேட் கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, வானிலை எச்சரிக்கை கருவி மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட உள்ளன.
அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறத்திற்க்கு புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டு, முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சமாக புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட உள்ளது.