கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் அறிமுகமான 12 நாட்களிலேயே, இந்தியாவில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமான பிறகு 3வது மாடலாக
சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கிய இந்த காரின் விற்பனை, 12 நாட்களில் 9,266 யூனிட்கள் எட்டியுள்ளது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தமாக இந்திய சந்தையில் 18,676 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
கடந்த மாதம் விற்பனையில், கியா நிறுவனத்தின் அதிக யூனிட்களை கடந்த இரண்டாவது மாடலாக சொனெட் உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் கியா நிறுவனத்தின் முதல் மாடலான செல்டோஸ் 9,079 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கியா சொனெட் மாடலை வாங்க இதுவரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் 70 சந்தைகளிலும் கியா மோட்டார்ஸ் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
சொனேட் மாடல் காரில் ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல் விளக்குகளை கொண்ட ஹெட்லைட்ஸ், அசத்தலான வடிவில் க்ரில், எல்இடி தரத்தில் டெயில்லைட்ஸ், புதுமையான டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
2020 கியா சொனேட் மாடல் கார் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளுடன் அறிமுகமாகவுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக கொடுக்கப்படவுள்ள இந்த என்ஜின் தேர்வுகளில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரையும், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 123 பிஎச்பி பவரையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் திறன் கொண்டவை.
அடுத்த 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரம் யூனிட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.