கொரோனா பரவல் காரணமாக 48வது டோக்யோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரசால், தற்போது வரை உலகின் பல்வேறு நிகழ்வுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. திட்டமிடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மோட்டார் சைக்கிள் பிரியர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த, 48-வது டோக்யோ மோட்டார்சைக்கிள் விழா கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் இந்த கண்கவர் நிகழ்ச்சியில், பிரத்யேகமாக ஏராளமான புதிய ரக பைக்குகள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். அடுத்த ஆண்டு நடைபெற இருந்த இந்நிகழ்வில், ஜப்பான் நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் பெரிய மாடல்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மிக முக்கிய வெளியீடுகளை அறிவிக்க தயாராகி இருந்தன.
2021ம் ஆண்டிற்கான டோக்யோ மோட்டார்சைக்கிள் விழா வசந்த காலத்தில் தொடங்கி நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உலகில் கொரோனாவைரஸ் அச்சம் இன்னும் முழுமையாக தீராததால், 2021 டோக்யோ மோட்டார்சைக்கிள் விழாவை ரத்து செய்தென டோக்யோ மோட்டார்சைக்கிள் விழா கூட்டமைப்பு முடிவு எடுத்து இருக்கிறது.
தொடர்ந்து, டோக்யோ மோட்டார்சைக்கிள் விழா 2022 ஆண்டில் நடத்தபடும் என விழா ஏற்பட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.